காரைக்காலில்....மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம் திறப்பு
காரைக்கால்
மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு நிகழ்ச்சி காரைக்காலில்
நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார்,
தமுமுக மாநில செயலாளர் M.S.அலாவுதீன், மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது,
தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது
மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நாகை (தெற்கு) மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனா, ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீத், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது மாசிம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து, உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







