காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக I.அப்துர் ரஹீம் வயது (32) வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2002 - ம் ஆண்டு முதல் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் காரை மாவட்ட பொருளாளராகவும் தற்சமயம் த.மு.மு.க மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார். தற்போது அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் திருநள்ளார் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக தேர்தல் அதிகாரி அசோக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது ம.ம.க மாவட்ட தலைவர் A.லியாகத் அலி, மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்கார் மற்றும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்புமனுவை திருநள்ளார் தொகுதி பொறுப்பாளர் A.ஹாஜா மெய்தீன் முன்மொழிந்தார்.