புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மாநில செயற்குழு ஆலோசனை
தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துள்ள மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரியில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி N.ரெங்கசாமி தலைமையிலான N.R.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது சம்பதமாக புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர் S.ஹைதர் அலி, ம.ம.க பொதுச்செயலாளர் P.அப்துல் சமது முன்னிலை வகித்தார். இக்கூட்டதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டதில் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவது என்றும், புதுச்சேரி, காரைக்கால் ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.