கருக்கங்குடி புதிய கிளை தொடக்கம்
காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி கிளை தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான், மாவட்ட முன்னால் செயலாளர் ராஜா முஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கிளை புதிய தலைவராக அன்சாரி, தமுமுக செயலாளராக அபூபக்கர், மமக செயலாளராக முஹமது பாசித், பொருளாளராக முஹமது நிசார், துணை தலைவராக சதாம் ஹூசைன், தமுமுக துணை செயலாளராக அஸ்லம், மமக துணை செயலாளராக ஜவஹர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.