தமுமுக மற்றும் மமக சார்பாக காரைக்காலில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் காட்டுநாய்கன் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் I.அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் M.ஷேக் அலாவுதீன், மமக மாவட்ட செயலாளர் M.நெய்நா முஹமது, தமுமுக மாவட்ட செயலாளர் M.முஹமது நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் S.யூசுப்கான், மாவட்ட முன்னாள் தலைவர் லியாகத் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் H.அப்துல் காசிம், K.மெய்தீன், மாவட்ட மறுத்துவ சேவை அணி செயலாளர் ராஜா முஹமது, உலமா அணி செயலாளர் ஜியாவுதீன், நகர தலைவர் சிக்கந்தர், நகர இளைஞர் அணி செயலாளர் அப்துல்லா, திருபட்டினம் கிளை தலைவர் ஹாஜா ஷேக் அலாவுதீன், கிளை நிர்வாகிகள் ஜெகபர் சாதிக், ஜியாவுதீன், ஜாகிர் ஹூசைன், தொழில் அதிபர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

