காரைக்காலில் - தமுமுகவினர் பெருநாள் தர்மம் வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு சதக்கத்துல் பித்ர் என்னும் பெருநாள் தர்மம் தமுமுக மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் தலைமையில் 550 நபர்களுக்கு ரூபாய்.180 மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், நகர தலைவர் ஜகபர் சாதிக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், நகர துணை செயலாளர் புஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.









