காரைக்காலில் - ஹஜ் பெருநாள் தொழுகை
காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை (KIPP) மற்றும் ஏகத்துவ பிரச்சார மையம் இணைந்து நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகை காரைக்கால் ராயல் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. குத்பா உரையை ஏகத்துவ பிரச்சார மைய மாநில தலைவர் முஹம்மது சலீம் நிகழ்த்தினார். பெருநாள் தொழுகையில் தமுமுக மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, தமுமுக நகர தலைவர் ஜகபர் சாதிக், தமுமுக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மமக மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் இக்பால், தமுமுக மாவட்ட தொண்டரணி செயலாளர் முஹம்மது ஜியாவுதீன், தமுமுக நகர துணை செயலாளர் புஹாரி, தமுமுக மாவட்ட முன்னாள் தலைவர் லியாகத் அலி, மற்றும் 250 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



