அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, March 18, 2015

த.மு.மு.க - காரைக்கால் மாவட்ட செயலாளராக I.அப்துல் ரஹீம் நியமனம் - தமுமுக தலைமை அறிவிப்பு

த.மு.மு.க - காரைக்கால் மாவட்ட செயலாளராக I.அப்துல் ரஹீம் நியமனம் - தமுமுக தலைமை அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் J.S.ரிபாய் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பு நிர்ணய சட்டத்தின்படி மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கிளை முதல் தலைமை நிர்வாகிகள் வரை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைப்படி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 18.01.2015 முதல் 3.3.2015 வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றன. 7.3.2015 அன்று வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து 17.03.2015 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு, தற்பொழுது மாற்றப்பட்டுள்ள அமைப்பு நிர்ணய சட்டத்தின்படி தமுமுகவின் காரைக்கால் மாவட்ட செயலாளராக I.அப்துல் ரஹீம் நியமனம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சகோதரர் I.அப்துல் ரஹீம்  அவர்களுக்கு கழக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP