அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, June 17, 2015

புதுச்சேரி மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தில் தகுதியானவர்களுக்கு கடன் உதவி கிடைப்பதில்லை

மனிதநேய மக்கள் கட்சி குற்றச்சாட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

                                       

புதுச்சேரி மாநில அரசின் கீழ் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் வரையறுக்கப்பட்ட தனது பணிகளைச் செய்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறு கடனுதவி, காலக்கடன், கல்விக் கடனுதவியை சிறுபான்மையின மக்களுக்கு தருவதற்காக இக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இக்கழகம் அப்பணிகளை செய்வதில்லை.

கழகம் சிறப்பாக செயல்பட வாரிய தலைவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு பின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. தகுதியானவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை.

காரைக்கால்  பகுதியில் இருந்து சிறுபான்மையினத்தை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறு கடனுதவிக்காக  மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் செயல்பட்டு வருகிறது, இதனால் கடனுதவி கோரி மனு அளித்தவர்கள் காரைக்கால் மாவட்ட சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக அலுவலகத்தை அணுகினால், முறையான பதில் இல்லை. எனவே, புதுச்சேரி முதல் அமைச்சர் இவ்விசயத்தில் தலையிட்டு சாமானிய மக்களுக்கும் பயன் தரும் வகையில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் செயல்பட வழிவகுக்க வேண்டும். 

மேலும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்கள் வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தால் அலைக்கழிக்கப்படுகின்றனர். புதுவை அரசு இவ்விஷயத்திலும் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP