அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, May 31, 2017

மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளை இறைச்சிக்காக விற்க தடைச் செய்துள்ள மத்திய பாஜக அரசின் தடை சட்டத்தை கண்டித்து

புதுச்சேரியில்.... தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்
 மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக புதுச்சேரி சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது தலைமை வகித்தார், 
 ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் லியாகத் அலி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் விசுவநாதன், திராவிடர் கழக வீரமணி, விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, கிராமப்புற பாதுக்காப்பு இயக்க சந்திரசேகர் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

 ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அலாவுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் அப்ஸல் பாஷா உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் மாவட்ட செயலாளர் பலுலுல்லா நன்றி கூறினார்



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP