அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, March 12, 2013

இலங்கை கப்பல் வருகைக்கு எதிர்ப்பு: காரைக்காலில் ஆர்ப்பாட்டம்


வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்திற்கு வந்த இலங்கை கப்பலுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, துறைமுக நிர்வாகத்தைக் கண்டித்து, காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினர், துறைமுக வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையை சேர்ந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்வதற்காக இந்த துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தது. இத்தகவல் அறிந்து இக்கட்சியினர் துறைமுக வாயில் முன் திரண்டனர்.
குறிப்பாக, தனியார் துறைமுக நிர்வாகம் இதற்கான செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். தொடருமேயானால், போராட்டத்தை வலுப்படுத்துவோம் என போராட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் கூறினர்.


ஆர்ப்பாட்டத்துக்கு அந்த கட்சியின் மாவட்டச் செயலர் நைனாமுகமது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அப்துல்ரஹீம், தமுமுக மாவட்டச் செயலர் நஜிமுதீன் உள்ளிட்டோர் பேசினர். மமக, தமுமுக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP