காரைக்கால், நேரு நகர் கஞ்சி காய்ச்ச விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் மூலம் நீக்கம் சீல் உடைக்கப்பட்டது - எல்லாஹ் புகழும் இறைவனுக்கே
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது, அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதர்க்காக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனை அறிந்த ஹிந்து முன்னணி, RSS, BJP யினர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முஸ்லிம்கள் இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்போகிறார்கள், மேலும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் (சுடுகாடு) இங்கு அமைக்க போகிறார்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி, இதே விஷயத்தை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச விட கூடாது என வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும் முறையாக நேரு நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் விசாரிக்காமல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்ச கூடாது என கூறி ஏராளமான போலிசாரையும் அங்கு குவித்தனர், தகவல் அறிந்த தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் அங்கு கூடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் அரசு சமாதான கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு நகர் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் நோன்புக்காக கஞ்சி மட்டுமே காய்ச்சுகிறோம், சங்பரிவார் குறிப்பிடுவதுபோல் பள்ளிவாசலோ, முஸ்லிம்களின் அடக்கஸ்தலமோ (சுடுகாடு) அங்கு அமைக்க மாட்டோம் என தெரியப்படுத்திய பின்பும் புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் சங்பரிவார்களின் பொய் கூற்றை ஏற்று முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சென்ற 3.7.2014 அன்று இரவு 9 மணிக்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என தடை விதித்து, பள்ளிவாசல் இடத்திற்கும் சீல் வைத்தது.
அதன் பிறகு இந்த விஷயத்தை முறையாக கையாள நினைத்த முஸ்லிம்கள் காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் A K முஹம்மது யாசின் தலைமையில் கூடி இந்த விஷயத்தை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு ஒரு கமிட்டி அமைக்கப்படடது. அதனடிப்படையில் நேரு நகர் ஜமாஅத் தலைவர் அப்துல் ரசாக், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், தமுமுக மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், சமூக ஆர்வலர் கௌஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என அரசின் தடையை ரத்து செய்தும், பள்ளிவாசல் இடத்திற்கும் வைத்த சீலை உடனே எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணை பெற்று வந்தனர். இதற்காக 3 முறை தமுமுக நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றம் சென்று வந்தனர்.



