வாஞ்சூரில் தீ விபத்து - தமுமுக உதவி
காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரில் நேற்று (15.11.14) நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக துணிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், தலைமை செயற்குழு உறுப்பினர் அலாவுதீன், நகர தலைவர் ஜெஹபர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் கமால் ஹுசைன், புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப், வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


