பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்க! - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்க! - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹம்மது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:இரயில்வே துறை 01.04.2015 முதல் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தியதை பல்வேறு அரசிய கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் எதிர்ப்பு காட்டியதையும் கண்டுகொள்ளாமல் ரயில்வே துறை 01.04.2015 முதல் பிளாட்பாரம் டிக்கெட்டி ரூ.10 ஆக உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
பொதுமக்கள் நலன் கருதி பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென ரயில்வே துறை நிர்வாகத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.நைனா முஹம்மதுகாரைக்கால் மாவட்ட செயலாளர், மமக

