காரைக்காலில் - மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை திட்டம் - 2015 நோட்டீஸ் விநியோகம்
மனிதநேய மக்கள் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம் 2015 ஒரு பகுதியாக காரைக்கால் வார சந்தையில் மனிதநேய மக்கள் கட்சியில் உறுப்பினராக சேர்வது ஏன் ? என்ற விளக்கத்துடன் கூடிய நோட்டீஸ் விநியோகம் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி முன்னிலையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லியாக்கத் அலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அக்பர்ஷா, மனிதநேய வர்த்தக சங்க மாவட்டசெயலாளர் அன்வர், நகர செயலாளர் முஹம்மது சர்புதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



