அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, June 7, 2015

மியான்மர் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையை கண்டித்து - காரைக்காலில் - தமுமுக - கண்டன ஆர்ப்பாட்டம்

பர்மாவில் சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடந்த நான்கு வருடங்களாக விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்,தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக நடைபெற்று வரும் கலவரங்களால் மாதம் தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். பர்மாவின் அரசும், ராணுவமும் இனப்படுகொலைகளுக்கு ஆதரவாக இருப்பது உண்மை, இந்தக் கொடுமைகளுக்கு அஞ்சி ரோஹிங்கிய முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்கும், மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு நாடுகளுக்கும் அகதிகளாக வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கை நடுக்கடலில் தத்தளிக்கிறது. ஆபத்தான கடல் பயணங்கள் மூலம் உயிர் தப்பிய 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும் நடுக்கடலில் தத்தளிப்பது கொடுமையானது. எதற்கெடுத்தாலும் மனித உரிமைகளைப் பேசும் மேலை நாடுகள் மௌனம் காப்பது வெட்கக்கேடு. ஐ.நா.சபை துரித முயற்சிகளை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
எனவே, மியான்மர் ரோஹிங்கிய முஸ்லிம்களை படுகொலை செய்யும் பவுத்த வெறியர்களை கண்டித்தும், மியான்மர் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கத் தவறிய மியான்மர் அரசை கண்டித்தும், மத்திய அரசு இனவெறி மியான்மர் அரசுக்கு இந்திய மக்களின் கண்டனத்தைப்
பதிவு செய்ய கோரியும், மியான்மர்







தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை செய்ய கோரியும், ஐ.நா.சபை மியான்மர் படுகொலைகளை உடனே தடுத்து நிறுத்த கோரியும் காரைக்கால் மாவட்ட தமுமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நகர செயலாளர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் யூசுப்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கண்டன உரை நிகழ்த்தினார். முடிவில் நகர பொருளாளர் கமால் ஹுசைன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர துணை செயலாளர்கள் செய்யது புஹாரி, ஜாஹிதீன், கிளை செயலாளர்கள் முஹம்மது யூசுப், சதாம் ஹுசைன், சாகுல் ஹமீது, ஜெக்கரியா, ஹாஜா ஜெகபர் சாதிக், முஹம்மது அன்ஹருதீன், ஜியாவுதீன், சபுருதீன் ஆகியோர் செய்திருந்தனர், ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP