காரைக்காலில் - மனிதநேய மக்கள் கட்சி மறியல் போராட்டம்.
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்து
காரைக்காலில் - மனிதநேய மக்கள் கட்சி மறியல் போராட்டம்.
------------------------------
காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா மெய்தீன், அக்பர்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாவட்ட செயலாளர் முஹம்மது அன்வர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது சர்புதீன், தொகுதி செயலாளர்கள் இக்பால், முஹம்மது இப்ராஹீம், ஹாஜா மெய்தீன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், நகர செயலாளர் மாசிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.




