அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, December 24, 2016

காரைக்கால், புதுத்துறையில் ....

+++++++++++++++++++++++++++++++++++++++

காரைக்கால் நகரம், புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 25.12.2016 அன்று புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் அலாவுதீன், நகர காவல் ஆய்வாளர் பாலச்சந்தர், காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது யாசின், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர், முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு இரத்த வங்கி அதிகாரி மதன்பாபு உத்தரவின்பேரில் முதுநிலை லேப் டெக்னீசியன் தர்மராஜ் செய்தார்,


நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது பயாஸ், மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மமக மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர் யூசுப்கான், நகர செயலாளர் கமால் ஹுசைன், நகர பொருளாளர் முஹம்மது சிக்கந்தர் மாவட்ட மாணவரணி செயலாளர் சதாம் ஹுசைன், காரை தெற்கு தொகுதி செயலாளர் இக்பால், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மெய்தீன், நகர துணை செயலாளர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை பொருளாளர் முஹம்மது பைசல் தலைமையில், கிளை துணை செயலாளர்கள் முஹம்மது நவீன், ஜாஹிர் ஹுசைன், செயற்குழு உறுப்பினர்கள் யாசர் அரபாத், அஜ்மல், ஹாஜா ஷெரீப், அர்ஷத் அஹமது, நவாஸ் ஷெரீப், நூருல் அமீன், நியாஸ், இம்ரான்கான் ஆகியோர் செய்திருந்தனர்.

இம்முகாமில் 40 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP