அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, February 8, 2017

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தில் குப்பை தொட்டி அமைத்தல் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கப்பட்டது.

 மனிதநேய மக்கள் கட்சியின் 9 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 7 அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக திருப்பட்டினம் கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக திருப்பட்டினத்தில் குப்பை தொட்டி அமைத்தல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரச்சுரம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு நிரவி திருப்பட்டினம் தொகுதி செயலாளர் முஹம்மது ஆசிக் தலைமை வகித்தார், தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹீம், ஹாஜா நஜிமுதீன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட துணை செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட வணிகர் சங்க செயலாளர் அன்வர், மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் முஹம்மது நாசர், நெடுங்காடு தொகுதி செயலாள ஹாஜா மெய்தீன், கிளை நிர்வாகிகள் அபூபக்கர், அமீருத்தீன், அம்பகரத்தூர் பாசில்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP