அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, April 23, 2017

திரு-பட்டினத்தில் தமுமுக இரத்ததான முகாம்

காரைக்கால் மாவட்டம், திருபட்டினம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 23.04.2017 அன்று திருபட்டினத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட  துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், மமக மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, நிரவி திருப்பட்டினம் தொகுதி செயலாளர் முஹம்மது ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன், மாநில செயலாளர் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது யாசின், முத்தவல்லி சபை நிர்வாகி சிராஜ், சமூக ஆர்வலர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்த சகோதரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு இரத்த வங்கி லேப் டெக்னீசியன் தர்மராஜ் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மமக கிளை செயலாளர் முஹம்மது தாரீக், கிளை பொருளாளர் அபூபக்கர் (யாசிர்),  கிளை துணை செயலாளர் முஹம்மது அமீருதீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மது சர்புதீன், தெற்கு தொகுதி செயலாளர் இக்பால், தமுமுக நகர துணை செயலாளர் செய்யது புஹாரி உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். 35 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.







Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP